search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 05 2009"

    இலங்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ‘18.05.2009’ படத்தின் விமர்சனம்.
    இலங்கையில் ஒரு தம்பதினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம் போராட்டம் குறித்து பேசுகிறார்கள்.

    அப்போது, தன்யாவின் தங்கை இயக்கத்தில் சேர ஆசைப்படுகிறாள். இயக்கத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். அதன்படி, கல்லூரி படிப்பை முடித்தவுடன் இயக்கத்தில் சேருகிறார். அப்போது தன்யாவும் இயக்கத்தில் சேருகிறார்.

    இயக்கத்தில் நிறைய செயல்களில் தன்யா ஈடுபடுவதாலும் துறுதுறுவென இருப்பதாலும், அவரை செய்தி வாசிப்பாளராக நியமிக்கிறார்கள். இவர்களின் இயக்கத்தை சேர்ந்தவரை தன்யா காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இந்த சமயத்தில் இலங்கை ராணுவம் அங்கிருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. 

    இதனால், தன்யாவின் வாழ்க்கை சூழல் மாறுகிறது. இதன் பின் இவரின் வாழ்க்கை எப்படி மாறியது. என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.



    நாயகியாக நடித்திருக்கும் தன்யாவை சுற்றியே இப்படம் நகர்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் இவரின் ரசிக்க வைக்கிறது. 

    இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை மிகவும் தைரியமாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கணேசன். இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் படத்தை எப்படி கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள். 



    இசைஞானி இளையராஜா இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். பார்த்திபன், சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு படத்தின் திரை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘18.05.2009’ உண்மைச் சம்பவம்.
    ×