search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanushkodi beach"

    • தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ராமேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • முதலில் படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக தெரிவித்த அவர், பின்னர் விமானம் மூலம் வந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ராமேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவரது பெயர் தினேஷ் காந்தன் (வயது 36) என்பதும், இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் இலங்கையில் சில ஆண்டுகள் போலீஸ்காரராக வேலை பார்த்து உள்ளார். அதன் பின்னர் வேலையை விட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் தினேஷ் காந்தன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண், அவரைவிட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேசுவரம் வர முயற்சி செய்துள்ளார்.அப்போது அவரை இலங்கை கடற்படையினர் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

    அதன்பின்னர் அவர் விசாவுக்கு விண்ணப்பித்து விமானம் மூலம் கடந்த 8-ந் தேதி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ராமேசுவரம் வந்து தனுஷ்கோடிக்கு சென்று அங்கு சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

    முதலில் படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக தெரிவித்த அவர், பின்னர் விமானம் மூலம் வந்த தகவலை தெரிவித்துள்ளார்.எதற்காக இப்படி மாற்றி கூறினார் என்று கேட்டபோது, அகதிகள் முகாமில் தங்குவதற்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தினேஷ் காந்தனிடம் கியூ பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அவர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வந்தாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழகம் வந்து அகதிகள் முகாமில் தங்கி வேலை செய்யலாம் என்று வந்ததாக தெரிவித்தார். அவர் சொன்னதை உறுதி செய்த போலீசார், அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

    அவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பி செல்ல இன்னும் 11 நாட்கள் அனுமதி இருப்பது தெரியவந்ததால் அவரை எச்சரித்து சென்னை சென்று விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


    தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமேசுவரம்:

    தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ராமேசுவரம் கியூ பிரிவு போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் நிற்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் அந்த முதியவர் இலங்கை தலை மன்னார் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் (வயது 52) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் ராமேசுவரம் வந்தேன். இங்கு கஞ்சா வாங்கிக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டேன். அப்போது கடற்படையினர் ரோந்து வருவதைப் பார்த்து மணல் திட்டையில் பதுங்கினேன்.

    அந்த சமயத்தில் நான் வந்த படகு கரை ஒதுங்கியது. அதனை மீட்க செல்வதற்காக கடலில் நீந்தி கரைக்கு வந்தேன். அப்போது தான் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன் என்றார்.

    போலீஸ் விசாரணையில் ஜெயசீலனுக்கும், ராமேசுவரத்தில் உள்ள கடத்தல் காரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் மண்டபம், ராமேசுவரம் காவல் நிலையங்களில் ஜெயசீலன் மீது வழக்குப்பதிவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    ×