search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devasena"

    • இங்குள்ள கடல் தீர்த்தத்தில் “கங்கை பூஜை” நடைபெறும்.
    • திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.

    திருச்செந்தூரில் தினமும் செந்திலாண்டவரை, உச்சிக்காலத்தில் கங்காதேவி வழிபடுவதாக ஐதீகம்.

    இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில் "கங்கை பூஜை" நடைபெறும்.

    முருகனுக்கு பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு, மேள தாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தை கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புபவர்.

    கடல் தீர்த்தத்தில் ஆவிர்பவித்திருக்கும் கங்காதேவிக்கு, முருகப் பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கின்றனர்.

    தீபாவளிப் பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவது போல், திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.

    தீபாவளி அன்று காலையில், முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக் காப்பு இடுவார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை அழித்த நாளில் உடலும் உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும், இவ்வாறு சந்தனக் காப்பு இடுகிறார்கள்.

    இந்த தினத்தில் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை, வெள்ளிப் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள்.

    திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு,

    இந்திரன் தன் மகள் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.

    திருச்செந்தூர், தன் மருமகன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே, தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம்.

    ×