search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Commissioners"

    • திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ஒரு கமிஷனர் மட்டுமே செயல்பட்டு வந்தார்.
    • சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநராகப் பணியாற்றிய சுல்தானா ஒரு துணை கமிஷனராக நியமிக்கப்ப ட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ஒரு கமிஷனர் மட்டுமே செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இரு துணை கமிஷனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநராகப் பணியாற்றிய சுல்தானா ஒரு துணை கமிஷனராக நியமிக்கப்ப ட்டுள்ளார்.ஓசூர் மாநகராட்சி கமிஷன ராகப் பணியாற்றி தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்தபால சுப்ரமணியம் மற்றொரு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார். இருவரும் திருப்பூர் மாநகராட்சிஅலுவலகத்தில் துணை கமிஷனர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.சேலம் மண்டல நகராட்சி இயக்கு நர் சுல்தானாஇடமாற்றம் செய்யப்பட்டதால், திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநராக இருந்த ராஜன் அங்கு நியமிக்கப்பட்டார்.

    இதனால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாம்பரம் மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் இளங்கோவன் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • 4 மண்டலங்கள் கொண்ட திருப்பூர் மாநகராட்சியில் 2 மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
    • உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இரண்டு துணை ஆணையாளர்கள் பணியிடம் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சுல்தானா திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராகவும், ஓசூர் மாநகராட்சி முன்னாள் ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 மண்டலத்துக்கு 15 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்கள் கொண்ட திருப்பூர் மாநகராட்சியில் 2 மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.

    திருப்பூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனராக இருந்த ராஜன் சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி முன்னாள் ஆணையாளராக இருந்த இளங்கோவன் திருப்பூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளராக இருந்த முகமது சபியுல்லா ஆவடி மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

    ×