search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சியில் புதிய துணை கமிஷனர்கள் பொறுப்பேற்பு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகராட்சியில் புதிய துணை கமிஷனர்கள் பொறுப்பேற்பு

    • திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ஒரு கமிஷனர் மட்டுமே செயல்பட்டு வந்தார்.
    • சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநராகப் பணியாற்றிய சுல்தானா ஒரு துணை கமிஷனராக நியமிக்கப்ப ட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ஒரு கமிஷனர் மட்டுமே செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இரு துணை கமிஷனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநராகப் பணியாற்றிய சுல்தானா ஒரு துணை கமிஷனராக நியமிக்கப்ப ட்டுள்ளார்.ஓசூர் மாநகராட்சி கமிஷன ராகப் பணியாற்றி தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்தபால சுப்ரமணியம் மற்றொரு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார். இருவரும் திருப்பூர் மாநகராட்சிஅலுவலகத்தில் துணை கமிஷனர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.சேலம் மண்டல நகராட்சி இயக்கு நர் சுல்தானாஇடமாற்றம் செய்யப்பட்டதால், திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநராக இருந்த ராஜன் அங்கு நியமிக்கப்பட்டார்.

    இதனால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாம்பரம் மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் இளங்கோவன் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×