search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deposit Fund"

    • வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • முகாமில் பங்கேற்பவர்கள் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை

    மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் நிதி உங்கள் அருகில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

    வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்புநிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    அதன்படி முகாம்கள் மதுரை மாவட்டத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், தேனி மாவட்டத்தில் சின்ன மனூர் நகராட்சி கூட்ட அரங்கத்திலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பேயன்பட்டியில் உள்ள செல்லப்பன் வித்யா மந்திரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, ஆத்துப்பட்டி பிரிவில் உள்ள ஜெயின் குரூப் ஆப் இன்ஸ்டி டியூஷன்சிலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மதுரை அதன் மண்டலத் துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    அதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTtஎன்ற இணைய தள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்த பின்னரே இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியிலும், தேனி மாவட்டத்துக்கு கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், சிவகங்கை மாவட்டத்துக்கு தேவகோட்டை ஆர்ச் அருகில் வீரா மருத்துவ மனையிலும், விருதுநகர் மாவட்டத்துக்கு விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின்பின்புறம் கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் பி.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    ×