search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Mayor Polls"

    • ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.
    • நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

    இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.

    ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதும் கூட, பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    பின்னர், மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

    இதையடுத்து மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே 22ம் தேதி மேயர், துணை மேயர் மற்றும் 6 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

    • பிப்ரவரி 16ல் நடப்பதாக இருந்த மேயர் தேர்தலை பிப்ரவரி 17ம் தேதிக்கு பிறகு நடத்த உள்ளதாக தகவல்
    • உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி உள்ளனர்

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் விஷயத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை முயற்சி செய்தும் தேர்தலை நடத்துவதில் தோல்வியே ஏற்பட்டது. அடுத்து வரும் வியாழக்கிழமை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி துணைநிலை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது துணைநிலை ஆளுநர் அலுவலகம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெய் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பிப்ரவரி 16ல் நடப்பதாக இருந்த மேயர் தேர்தல பிப்ரவரி 17ம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து 17ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் அரசியலமைப்பு விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக நேர்மையற்ற தந்திரங்களை கையாள்வதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. 

    ×