search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delegates"

    • குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக கூட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்திடவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமைகள், விருப்பக் கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்திடுவது குறித்து எடுத்து கூறப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டினை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நகர செயலாளர் சண்முக சுந்தர் வரவேற்றக, நகர அவைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.
    • மேல் அமைப்பு பிரதிநிதிகள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நகரம், ஒன்றியம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் டி.சி.சண்முக சுந்தர் வரவேற்றார். நகர அவைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.

    இதில் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் கோபால், முன்னாள் எம்.பி ராஜமாணிக்கம், அமைப்புச் செயலாளர் சிங்காரவேல், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி வெற்றிவேல், வடக்கு ஒன்றிய பொருளாளர் அ.க. வெற்றிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் முன்னாள் நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வடக்கு சுமித்திரா, ரவி, மதிவாணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதேவி இளங்கோவன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட, நகரம் சார்பில் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மேல் அமைப்பு பிரதிநிதிகள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×