search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீ பேசினார்.

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

    • குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக கூட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்திடவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமைகள், விருப்பக் கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்திடுவது குறித்து எடுத்து கூறப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டினை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×