search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crackers threw"

    • தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சிவா.
    • இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சிவா. கடந்த 31-ந்தேதி இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது பட்டாசை கொளுத்தி போடுமாறு சிவா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அனைவரும் பட்டாசை கொளுத்தி அந்த பஸ்சின் டயரில் வீசி உள்ளனர்.

    இந்த சம்பவங்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×