search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coutralam Main falls"

    • மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
    • அருவி தடாகத்தில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கோடை மழையும் விட்டுவிட்டு பெய்து வந்தது.

    இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் பழைய குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் நேற்று விரால், கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்து தூர் நாற்றம் வீசியதால் இறந்த மீன்களை குற்றாலம் பேரூராட்சி ஊழியர்கள் முழுமையாக அப்புறப்படுத்தினர். கடுமையான வெயில் மற்றும் தடாகத்தில் போதிய தண்ணீர் ஓட்டம் இல்லாததே மீன்கள் இறப்பதற்கான காரணம் என கூறப்படுகிறது.

    ×