search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counterfeit Lover"

    பல்லடம் அருகே 9 மாதம் பிணத்துடன் வசித்து வந்ததாக பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே மில்லில் பிட்டராக வேலை பார்த்த சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அதை தொடர்ந்து இருவரும் கணவன்- மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 3½ வயதில் நித்திகாஸ்ரீ என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 1 வருடமாகபல்லடம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையத்தில் ராமசாமி என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.

    இதற்கிடையில் இவர்கள் குடியிருந்த வீடு சில வாரங்களாக பூட்டிக்கிடந்தது. மேலும் அவர்கள் வாடகையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு குடியேற முயன்றபோது லதா கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணித்து மண் போட்டு மூடப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து காமநாயகன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் கள்ளக்காதலன் செந்திலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே பூசாரிபாளையம் பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற செந்திலை போலீசார் கைது செய்தனர். கைதான செந்தில் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நானும், லதாவும் கணவன் மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தோம். இந்த நிலையில் எங்களுக்கு நித்திகா ஸ்ரீ என்ற குழந்தை பிறந்தது. எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவளுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு என்னை விட்டு பிரிந்து கணவருடன் சென்று விடுவேன் என்று மிரட்டினார். இதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து லதாவின் தலையில் அடித்துக் கொன்றேன். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவளுடைய உடலை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்து, அதன் மேல் பகுதியில் மண்ணை போட்டேன்.

    பின்னர் குழந்தையை கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாவக்காட்டுபாளையத்தில் உள்ள லதாவின் தாயாரிடம் விட்டேன். அவர் கேட்டபோது லதா கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாவும், அவளை சமாதானம் செய்து அழைத்து வந்து குழந்தையை அழைத்துச்செல்கிறேன். அதுவரை இருக்கட்டும் என்றேன். அவரும் அதனை நம்பி விட்டார்.

    பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியவில்லை. 9 மாதங்கள் பிணத்துடன் வசித்தேன். பின்னர் வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதங்களாக வேலைக்கு சென்றேன். கொலை குறித்து போலீசாருக்கு தெரிந்ததும் தலைமறைவானேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் போலீசில் வாக்கு மூலம் கொடுத்தார். கைதான செந்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ×