search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corpse in the well"

    • சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை அடுத்த மூங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்ப வில்லை. இதனால் உறவி னர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கருப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த அரசங்குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வீர பாண்டியன் (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வீர பாண்டியன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து நேற்று கீழ்வீதி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் உடல் மிதப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் இறந்த நபர் வீரபாண்டியன் என்பது தெரியவந்தது.

    உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×