search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona new Cases"

    • நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது.
    • மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. நேற்று மாவட்டத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அதேபோல் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளை, ராதாபுரம், வள்ளியூர் பகுதியிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 4 மண்டல பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மேலப்பாளையம் பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் இன்று கிருமிநாசினி தெளித்தனர்.

    • நெல்லையில் நேற்று பாதிப்பு 9 ஆக இருந்த நிலையில் இன்று 17 ஆக உயர்ந்தது.
    • நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த 15-ந்தேதி கொரோனா பாதிப்பு பூஜ்யமாக இருந்த நிலையில் மறுநாள் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் தினசரி பாதிப்பு உயர தொடங்கியது. நேற்று பாதிப்பு 9 ஆக இருந்த நிலையில் இன்று 17 ஆக உயர்ந்தது.

    இன்றைய பாதிப்பில் மாநகர பகுதியில் மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நாங்குநேரியில் 5 பேருக்கும், ராதாபுரத்தில் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற வட்டாரங்களில் இன்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    தற்போது பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே உள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.

    இதற்கிடையே கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் 50 முதல் 100 படுக்கைகள் வரையிலும் தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

    கடந்த காலத்தில் கொரோனா அலையின்போது ஒதுக்கப்பட்ட வார்டுகள், படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருப்பதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×