நெல்லை மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மேலப்பாளையம் பகுதியில் ஒரு தெருவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.
மேலப்பாளையம் பகுதியில் ஒரு தெருவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. நேற்று மாவட்டத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

அதேபோல் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளை, ராதாபுரம், வள்ளியூர் பகுதியிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 4 மண்டல பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மேலப்பாளையம் பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் இன்று கிருமிநாசினி தெளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com