search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College students arrest"

    சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகை கடையில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் நியானசந்த் ஜெயின். இவர் பலமநேர் லிங்காயத் ரோட்டில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய பேரன் பிரதீப் ஜெயின் (21). இவர் பலமநேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தாவின் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் கோவா, கேரளா சுற்றுலா செல்ல வேண்டும் என தன்னுடைய தாத்தாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் நகைகளை திருட திட்டம் தீட்டினார். நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு நியானசந்த் சென்றார்.

    இதை நோட்டமிட்டட பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் கடையை திறந்து பீரோவில் இருந்த 1 கிலோ 240 கிராம் தங்க நகைகளை எடுத்து கொண்டு மீண்டும் கடையை பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடையை திறந்து பார்த்தபோது பீரோவில் இறந்த நகைகள் மாயமானதை கண்ட நியானசந்த் ஜெயின் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து ஈதுருபாஷா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் விசாரணை நடத்தினர்.

    அதன்பின் பிரதீப் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது பலமநேர் பஸ் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து பஸ் நிலையத்தில் இருந்த பிரதீப்பை பிடித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் நகைகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் இருந்த புரந்தர் ரெட்டி (21), பிரதிவ்ராஜ் (20) உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள கல்யாண் (20), குணசேகர் (20), யஸ்வந்த் (20) ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகைகளை திருடி வெளியே விற்று சுற்றுலா செல்ல இருந்ததாக தெரிவித்தனர். #tamilnews
    சேலையூரில் கஞ்சா வைத்திருந்ததாக 5 கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிக்கரணை:

    சேலையூர், நியூபாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தங்கி இருந்த வாலிபர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினார்கள். அங்கு தங்கி இருந்த 5 பேர் கஞ்சா போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, கஞ்சா வைத்திருந்ததாக யோகேஷ், மெல்வின், ராஜு, கிருஷ்ணன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் என்ஜினீயரிங் மாணவர்கள். ஒருவர் கலைக்கல்லூரி மாணவர்.

    இவர்கள் அனைவரும் இந்த வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங்கில் கைதான 3 மாணவர்களையும் கல்லூரியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாட பிரிவுகளில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு இளங்கலை விலங்கியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான அனிஷ் மைக்கேல், சுஜித் குமார், சிவகுமார் ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன் அதே துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் இயங்கும் ராக்கிங் தடுப்பு குழு விசாரணை நடத்தியது. இதில் மாணவர்கள் 3 பேரும் ராக்கிங் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. மேலும் ராக்கிங் குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் ராக்கிங் செய்த மாணவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறும் போது, கைதான 3 பேரையும் கல்லூரியில் இருந்து நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    சென்னையில் ஆடம்பர செலவுக்காக செல்போன் பறித்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    பெரம்பூர் மேம்பாலம் அருகே செம்பியம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஹரிகுமார், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் நேற்று இரவு 11 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை நிற்கும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.

    போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று, மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 2 பேரையும் செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அப்போது, அவர்கள் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் என்றும் பொருளாதாரம் 2-வது ஆண்டு படித்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது.

    இதில் ஒருவர் கொடுங்கையூரை சேர்ந்த கிறிஸ்டோபர் (19), இன்னொருவர் மோகன சித்தன் (19) எருக்கஞ்சேரியை சேர்ந்தவர்.

    இவர்களிடம் விலை உயர்ந்த 3 செல்போன்கள் இருந்தன. இவை வரும்வழியில் வழிப்பறி செய்யப்பட்டவை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அதில் ஒன்று மாதவரம் நெடுஞ்சாலையில் இரவு 9 மணி அளவில் பேசிக்கொண்டிருந்த பிரவீன்ராஜ் என்பவரிடம் பறிக்கப்பட்ட செல்போன் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி ஏற்கனவே அவர் செம்பியம் போலீசில் புகார் செய்து இருந்தார். இதுபோல் மற்ற 2 செல்போன்களும் வழிப்பறி செய்யப்பட்டவை என்பதை மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவர்கள் கிறிஸ்டோபர், மோகன சித்தன் இருவரையும் செம்பியம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கல்லூரி தொடங்க இருக்கிறது. கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுக்கும் பணம் தேவை. எனவே, விலை உயர்ந்த செல்போன்களை பறித்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டோம்.

    சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஒருவர் செல்போன்களை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக கூறினார். எனவே ஆடம்பர செலவுக்கு பணம் கிடைக்கும் என்பதால் வழிப்பறி செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Tamilnews
    ×