search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector discussion"

    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
    • மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.

    ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போன்ற தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு பெருந்துறை சாலை, பழனிச்சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேல்நிலை 2-ம் ஆண்டில் 139 மாணவ, மாணவிகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டில் 87 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வருகின்றது.

    இதனைத்தொடர்ந்து கலெக்டர் இப்பள்ளியின் வளாகத்தை மேற்பார்வையிட்டதோடு பள்ளி நூலகம், ஆசிரியர் களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, தொழில் நுட்ப வகுப்பறை, மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புறத்தூய்மை, மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு, மாணவ, மாணவிகளின் விடுதிகள் மற்றும் உணவகத்தினையும் பார்வையிட்டார்.

    மேலும் முந்தைய மாணவர்கள் பங்கு பெற்ற போட்டித்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணாக்களின் பல்வேறு விதமான வினாக்களுக்கு பதில் அளித்ததுடன், "தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது" என்றும், ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றியும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    மாணவர்களிடம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இலக்கினை நிர்ணயிக்க வேண்டும். பல புத்தகங்களை படிக்க வேண்டும். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, அதை தகர்த்து விட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

    மாணவர்களின் பல்வேறு திறமைகளைப் பாராட்டி அவற்றை மென்மேலும் வளர்த்து அடுத்த வருடம் அனைவரும் சாதனையாளர்களாக மாறி வரும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் மாணவ, மாணவி கள் வெளிப்படுத்திய தனித் திறன்களான கவிதை, பாடல், பேச்சு, சித்திரத் தையல் போன்றவற்றை கண்டு மகிழ்ந்து அவர்களை மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், உதவி திட்ட அலுலவர் ராதாகிருஷ்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், ஒருங்கிணைப்பாளர் மாதுனியாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற 19-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி காப்பகத்தில் வசிக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடி 32 மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

    இதில் பங்கேற்ற மாணவி களிடம் கலெக்டர் மேகநாத ரெட்டி அவர்களுடைய ஆர்வம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார். பின்னர் கலெக்டர் பேசுகையில், இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழி களை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது உங்களை முழுமைப்படுத்தும். இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

    இதைவிட மிக முக்கியமானது நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களை சுற்றி உள்ள வர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலை யில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான வழிமுறைகள் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, வட்டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×