என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CoconutCalf"
- 3 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
அம்பை:
அம்பை வட்டாரம் வெள்ளாங்குளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அம்பை ஒன்றியக்குழு தலைவர் சிவணுபாண்டியன் என்ற பரணி சேகர் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றி வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி திட்டங்கள் பற்றி அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் ஆலோசனை பேரில் நடைபெற்ற விழாவில் பேசிய வேளாண்மை அலுவலர் ஷாகித் முகைதீன், அம்பை வட்டாரத்தில் வெள்ளாங்குளி, அயன்திருவாலீஸ்வரம் மற்றும் அடையக்கருங்குளம் ஆகிய 3 கிராம பஞ்சாயத்துகள் இவ்வாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கிராம பஞ்சாயத்துகளில், ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மற்ற இரு கிராம பஞ்சாயத்துகளிலும் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 22 விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில் வெள்ளாங்குளி பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயலெட்சுமி, குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்கசரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்