search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-operative Society secretary"

    காரமடை அருகே ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து கூட்டுறவு சங்க செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    காரமடை:

    காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இச்சங்கத்தில் 2 ஆயிரத்தி 148 உறுப்பினர்களாக உள்ளனர். சங்க செயலாளராக மனோகரன் என்பவர் உள்ளார். சங்கத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரூ.2 கோடிக்கு மேலாக டெபாசிட் செய்து உள்ளனர்.

    இதில் மனோகரன் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் மனோகரன் கூட்டுறவு சங்கத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

    அவர் நேற்று முன்தினம் அலுவலகம் வந்ததை அறிந்த பொதுமக்கள் அலுவலகத்துதில் திரண்டனர். அவர்கள் மனோகரனை முற்றுகையிட்டு தங்களது பணத்தை திருப்பித்தரக் கேட்டனர். இதனால் மனோகரன் காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முறைகேடு தொடர்பாக புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

    இதற்கிடையே சங்க உறுப்பினர்களும் அங்கு வந்தனர். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து பொதுமக்களின் வைப்புத் தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    சம்பளத்தை நிறுத்தி வைத்ததால் கூட்டுறவு சங்க செயலாளரை சேல்ஸ்மேன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு வாழியூரில் உள்ள ரேசன் கடையின் விற்பனையாளராக கோவிந்தசாமி (வயது 54). என்பவர் பணியாற்றி வருகிறார். படவேடு வீரக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (53). இவர் படவேடு வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக உள்ளார்.

    இந்த கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் தான் கோவிந்தசாமி சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். கோவிந்தசாமி அங்கு ஏற்கனவே உர விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது பணம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பணம் செலுத்தி வந்தார். தற்போது பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செயலாளர் சகாதேவன் அவருக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் கோவிந்தசாமி சகாதேவன் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத் திற்கு கோவிந்தசாமி வந்தார். அப்போது அங்கிருந்த செயலாளர் சகாதேவனிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி சகாதேவனை கத்தியால் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த சகாதேவனை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சந்தவாசல் போலீசார் சேல்ஸ்மேன் கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.
    ×