search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co operative association"

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju #MiniSuperMarket
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் சதாசிவம் சாலையில் உள்ள ரே‌ஷன் கடை அருகில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

    இதுபோல தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 மினி சூப்பர் மார்க்கெட் படிப்படியாக திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 5 மினி சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படுகிறது.

    சிறு சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 300 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து 5 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    குடியிருப்பு பகுதிகளில் இந்த மினி சூப்பர் மார்க்கெட் அமைக்கப்படுதால் பொது மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற வசதியாக இருக்கும். மற்ற மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளை விட விலை குறைவாக பொருள் தரமாக இருக்கும்.

    கோப்புப்படம்

    லாபம் நோக்கமில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திறக்கப்பட உள்ளது.

    தரமணி, ஐ.ஐ.டி., சூளைமேடு, காமராஜர் நகர், ராயப்பேட்டை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளையொட்டி 4 மினி சூப்பர் மார்க்கெட் கடைகள் திறக்கப்படும்.

    ஏற்கனவே திருச்சியில் மினி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. மதுரையில் 3 இடங்களிலும் பிற மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
    திருப்பூர் ரோட்டில் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் புதிய பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    உடுமலை:

    திருப்பூர் ரோட்டில் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் புதிய பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வீதம் 77 ஆயிரம் பேருக்கு ரூ.50 கோடி மதிப்பில் விலையில்லா நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தினையும் மற்றும் முதல் முறையாக மேற்கு மாவட்டங்களை சார்ந்த ஏழை பெண்களுக்கு 12000 கறவை பசுக்களும் தொடர்ந்து விலையில்லா ஆடுகளும் வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைக்கவுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 4.9.1935 முதல் செயல்பட தொடங்கிய நாளில் இருந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது சங்கத்தில் 8560 உறுப்பினர்களை கொண்டு ரூ.15.25 லட்சம் பங்கு மூலதனத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், விவசாய பெருங்குடி மக்களிடம் விளை பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை பணியினையும் மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகள் அரசு ஆதார விலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளிடம் கொப்பரைகள் ரூ.65 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இச்சங்கத்தின் சார்பில் செயல்படும் அம்மா மருந்தகம் பொது மக்களுக்கு மருத்துவ சேவையினை புரிந்து ரூ.4.90 கோடிக்கு விற்பனை இலக்கினை எட்டியுள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு சுமார் 70 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இச்சங்கத்தின் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி., சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், முன்னாள் வாரியத்தலைவர் லியாகத், இந்துஸ்தான் பெட்ரோலிய மண்டல மேலாளர் நாகேஷ், துணைப்பதிவாளார்கள் சண்முகவேலு, திருமாவளவன், கூட்டுறவு சார்பதிவாளார்கள் சாகுல் ஹமீது, உதயகுமார், அப்துல் கபாப், நிர்மலா, கூட்டுறவு சங்க மேலாளார் ரவி, அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
    ×