search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Resignation"

    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.



    மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring
    சென்னை:

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.



    ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவு பெற்று 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மே 67-ம் தேதி வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக்கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். வால்மார்ட் இணைய வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring

    ×