search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China Taiwan"

    • தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.
    • தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.

    தைபே

    சீனாவும், தைவானும் 1949-ம் ஆண்டு பிரிந்து விட்டன. ஆனாலும் தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. தைவானோ தான் ஒரு சுதந்திர நாடு என்று நினைக்கிறது.

    தைவானை அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா துடிக்கிறது. இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் தைவான் அருகே தனது போர் விமானங்களையும், குண்டு வீசும் விமானங்களையும் சீனா நேற்று முன்தினம் பறக்க விட்டுள்ளதாக தைவான் குற்றம் சாட்டுகிறது.

    இந்த வகையில் நேற்று முன்தினம் சீனாவின் 10 விமானங்கள், தைவான் ஜலசந்தியில் உள்ள இடைநிலைக்கோட்டின் அருகே (சீனாவை பிரிப்பது) பறந்ததாக தைவான் ராணுவ அமைச்சகம் சொல்கிறது. இந்த 10 விமானங்களில் 6 விமானங்கள் ஷென்யாங் ஜே-11 ரகம், 4 விமானங்கள் ஜே-16 ரகம் என தைவான் மேலும் கூறுகிறது. இதன் காரணமாக அங்கே புதிய பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

    தைவானுக்கு தென்மேற்கில் 4 செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும், ஒரு ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானமும், 3 எச்-6 குண்டு வீசும் விமானங்களும் நேற்று முன்தினம் காணப்பட்டதாகவும் தைவான் ராணுவம் கூறுகிறது.

    • 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

    தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. தைவான் மீது பொருளாதார தடையையும் சீனா விதித்தது.

    தைவானை கப்பல்கள், விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட முப்படையினர் 6 முனைகளில் சுற்றி வளைத்து உள்ளனர். அவர்கள் போர் பயிற்சியை மேற்கொண்டனர்.

    கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா சோதனை நடத்தியதாக தைவான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் குண்டுகளை வீசியும் , பீரங்கி தாக்குதல் நடத்தியும் சோதனையை மேற்கொண்டது. வருகிற 7-ந்தேதி வரை இந்த போர் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்து உள்ளது.

    இதனால் எந்த நேரமும் தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற பீதி உருவாகி உள்ளது. பொது மக்களும் என்ன நடக்கப் போகிறதோ தெரிய வில்லையே என்ற அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ரஷியா-உக்ரைன் போரை தொடர்ந்து சீனா-தைவான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல் தொடர்பு ஒருங் கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:-

    ஒரே இரவில் தைவான் நீர்ச்சந்தி பகுதியில் சீனா 11 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி உள்ளது. இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நான்சி பெலோசியின் வருகையை சாக்கு போக்காக சொல்லி சீனா ஆத்திரமூட்டும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

    இதை அமெரிக்கா ஏற்கனவே எதிர்பார்த்தது தான். சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்காவும் தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பவும் மாட்டோம். தைவானின் நலன் மற்றும் பிராந்தியத்தின் நலன் மட்டுமே எங்களது குறிக்கோள்.

    மேலும், பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தைவான் நாட்டை சுற்றிவளைத்து சீன போர் விமானங்கள் திடீர் என போர் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. #ThePeoplesLiberationArmy
    பீஜிங்:

    தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக  சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சீன ராணுவத்தின் எச்-6கே ரக குண்டு வீசும் விமானங்கள் மற்றும்  எஸ்யு-35 ரக போர் விமானங்கள் இன்று தைவான் நாட்டை  சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த ஒத்திகையால் தைவானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டை மிரட்டும் தொனியில் கடந்த வருடமும் சீனா இதை போன்றே போர் ஒத்திகையில் ஈடுபட்டது.

    சீன ராணுவம் அதன் போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நவீன ஏவுகனைகள் ஆகியவற்றை உலக தரத்திற்கு ஏற்ப வேகமாக தரம் உயர்த்தி வருகிறது. ஆனால், தைவான் ராணுவம் அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது. எனவே, சீனாவிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் நவீன ஆயுதங்களை இன்னும் அதிகளவில் அமெரிக்கா வழங்க வேண்டும் என தொடர்ந்து தைவான் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றது. #ThePeoplesLiberationArmy
    ×