search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China Rocket"

    • விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 58 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.

    இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

    விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ராக்கெட் திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
    • ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    CERES-1 ராக்கெட் தொடரைப் பயன்படுத்தி ஏவப்படும் 7வது ராக்கெட் பணி இதுவாகும்.

    • திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய 2வது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையை லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.
    • சீனாவில் தனியார் வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.

    சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.

    ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 09:00 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்துகிறது.

    இதன் மூலம், மீத்தேன் வாயுவை எரிபொருளாக கொண்டு செலுத்தப்படும் விண்வெளி வாகனங்களை உருவாக்கும் போட்டியில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஜோஸின் நிறுவனமான புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகியவற்றை சீனா முந்தி விட்டது.

    மேலும், திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இரண்டாவது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையையும் லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம், எரிபொருளை நிரப்பி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சீனாவின் பீஜிங் டியான்பிங் டெக்னாலஜி எனும் நிறுவனம் ஒரு மண்ணெண்ணெய்-ஆக்சிஜன் ராக்கெட்டை ஏவி வெற்றி கண்டது.

    2014ல் விண்வெளி துறையில் தனியார் முதலீட்டை சீன அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து சீன வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.

    லேண்ட்ஸ்பேஸ் கடந்த டிசம்பர் மாதம் ஜுக்-2 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் இறங்கி தோல்வி கண்டது. தற்போது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

    சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

    பீஜிங்:

    சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

    23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் என்றும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவிக்கப்பட்டது.

    செயற்கைகோள், விரும்பிய திசையில் செல்ல உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒரு பகுதி தான் பூமியில் விழவில் உள்ளது என்றும் அந்த பாகங்கள் மீது பெரியதாக இருப்பதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    விண்ணில் ஏவப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என்றும் ஆனால் எந்த பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.

    இதனை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தது. ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    நாசாவை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. #NASA #Heavyliftrocket

    பெய்ஜிங்:

    விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9’ என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த ராக்கெட் 10 மீட்டர் அகலம் கொண்டது. 4 சக்தி வாய்ந்த ‘பூஸ்டர்’கள் பொருத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 5 மீட்டர் அகலம் கொண்டவை. இது பூமியின் கீழ்மட்ட சுற்று பாதையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ராக்கெட் வருகிற 2030-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சீன தொழில்நுட்ப அகாடமி இதை உருவாக்கி வருகிறது.

     


    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் 13 டன் எடையை சுமந்துசெல்லும் திறன் படைத்த ராக்கெட்டை தயாரித்து வருகிறது. அது 2020-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. ஐரோப்பாவின் அரீனே 5 ராக்கெட் 20டன் எடையையும், எல்கான் முஸ்கின் பால்கான் ராக்கெட் 64டன் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. #NASA #Heavyliftrocket

    ×