search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Torture"

    • வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார்.
    • பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 31). இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனி மலேசியாவிற்கு வேலைக்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த அவர், அவ்வப்போது தனது மகளின் கையை பிளேடால் வெட்டியும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்து அவரிடம் பணம் கேட்டுள்ளார்.

    வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். மேலும், அவர் இதுகுறித்து மலேசியாவில் இருந்து அதிராம்பட்டினத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறினார். பின்னர், போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்து குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர், பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மனைவியை சொந்த ஊருக்கு வரவழைக்க தான் பெற்ற குழந்தையை துன்புறுத்தி வீடியோவாக எடுத்த இந்த கொடூர தந்தையின் செயல் அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • டெங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்
    • அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.

    குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியிருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுள்ளார். குழந்தையை டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறைந்து, அந்த செயலை படம்பிடித்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.

    இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வலியால் குழந்தை அழுதபோதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பலர், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    "ஒரு தாயாக, இந்த வீடியோவைப் பார்த்து நான் அழுதேன். இந்த மனிதன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு மனிதன் செய்யும் காரியமே அல்ல" என்று சமூக ஊடக பயனர் ஒருவர் கூறினார்.

    "தந்தைக்கான உரிமையை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தை எதிர்காலத்தில் அதிகமாக இது போன்ற துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடும்" என்று மற்றொரு பயனர் கூறினார்.

    குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகராட்சி, திகிலூட்டும் இந்த வீடியோ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    டெங்கை விட்டு அக்குழந்தையின் தாயார் சென் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெங், இந்த வீடியோவை கண்டதும் சென் திரும்பி வருவார் என நம்பி இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். இந்த துன்புறுத்தலின் விளைவாக தாக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளாட்சி அமைப்பு அந்த குழந்தையை தற்போது கவனித்து வருகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தை டெங்கை கைது செய்தனர்.

    ×