search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child injury"

    • தினந்தோறும் பள்ளி வாகனங்கள் சென்று பள்ளி குழந்தைகளைஅழைத்து வருவது வழக்கம்.
    • நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் லாரி வேகமாக மோதியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மங்களூர் நேரு மழலையர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள தொண்டாங்குறிச்சி, அரியநாச்சி, கழுதூர், கல்லூர், ஆவட்டி ,ம.பபுடையூர் பகுதிக்கு தினந்தோறும் பள்ளி வாகனங்கள் சென்று பள்ளி குழந்தைகளைஅழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி பஸ் இன்றும் குழந்தைகளை அப்பகுதியில் இருந்து அழைத்துக் கொண்டு ஆவட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த பகுதியில் உள்ள கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பள்ளி குழந்தைகள் ஏற்றிக் கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் லாரி வேகமாக மோதியது  இந்த விபத்தில் பஸ்சில் இருந்த குழந்தைகள் அலறினர். மேலும் இதில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனே குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    • ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; மனைவி- குழந்தை படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் பவுன்குரு (வயது 28). இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (21) என்ற மனைவியும், 1 வயது கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வருகிற 29-ந் தேதி குழந்தைக்கு காது குத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக உறவினர்களை அழைக்கும் பணியில் பவுன்குரு, அவரது மனைவி தீவிரமாக இருந்தனர். சம்பவத்தன்று காடனேரி பகுதியில் உள்ள உறவினரை அழைப்பதற்காக பவுன்குரு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.மருதநத்தம் விலக்கு ரோட்டில் சென்றபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பவுன்குரு ஆட்டோவை திருப்பினர்.

    இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் தலைகுப்பிற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குரு பரிதாபாக இறந்தார்.புவனேஸ்வரி,
    1 வயது குழந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×