search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengalpattu Collectorate"

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
    • 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாண்டூர் கிராமத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் பெரு மாட்டுநல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குடியிருக்கும் பாண்டூர் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க கூடாது. இது அமைந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.

    இப்பகுதியில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் அஸ்தினாபுரம் ஏரியும், 20மீட்டர் தூரத்தில் குழந்தைகள் காப்பகம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன.

    எனவே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×