search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central schemes"

    தமிழக பாஜகவினரிடையே வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #BJP #PMModi #TNBJP
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தொண்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகிறார். 

    இந்நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகளவில் மக்களை இணைக்க வேண்டும்.



    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை அடைந்துள்ளது.

    மத்திய அரசின் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் 4 லட்சம் இளைஞர்களும், வங்கிக்கடன்கள் மூலம் பல லட்சக்கணக்கானவர்களும் பலனடைந்து உள்ளனர். சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 3 துறைமுகங்கல் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். #BJP #PMModi #TNBJP
    மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களை பெற உதவுவதில் மாநில கவர்னர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். #centralschemes #GovernorsConference #Modi
    புதுடெல்லி:

    அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் நாளான இன்று நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்கவுரை ஆற்றினார்.

    பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களை பெற உதவுவதில் மாநில கவர்னர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


    நமது நாட்டின் அரசியலமைப்பு முறை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் முதுகெலும்பாக கவர்னர் பதவி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. இவை யாவும் டிஜிட்டல் அருங்கட்சியகங்களில் கட்டாயமாக பதிவுசெய்து பாதுகாக்கப்பட வேண்டும்.

    பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களின் கவர்னர்கள், இந்த மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் கல்வி, விளையாட்டு மற்றும் நிதியுதவி சார்ந்த திட்டங்கள் அவர்களை முழுமையான அளவில் சென்றடையும் வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார். #centralschemes #GovernorsConference #Modi
    ×