என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Central Government order"
புதுடெல்லி:
பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய உத்தரவை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் வீட்டுப் பாடம் அளிக்க கூடாது. இந்த இரண்டு வகுப்புகளிலும் மொழி பாடம், கணித பாடம் தவிர வேறு எந்த பாடங்களையும் பள்ளிகளில் கற்பிக்க கூடாது.
3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுசூழல் தொடர்பான பாடங்கள், கணிதம் ஆகியவற்றை என்.சி.இ. ஆர்.டி. திட்டத்தின்படியே கற்பிக்க வேண்டும்.
இந்த வகுப்பு மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக எந்த பாடபுத்தகங்களையோ, வேறு பொருட்களையோ கொண்டு வரும்படி அறி வுறுத்தக்கூடாது. முதல், 2-வது வகுப்பு மாணவர்களின் புத்தகபை ஒன்றரை கிலோ எடையை தாண்டக் கூடாது. 3-வது முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகபை எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரைதான் இருக்க வேண்டும்.
6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 4 கிலோவுக்கு மேலும், 8-ம் வகுப்பு, 9-ம் வகுபபு மாணவ- மாணவிகளுக்கான புத்தக பை எடை 4.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்க கூடாது. எந்தெந்த வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அந்த மாணவ- மாணவிகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #School #CentralGovernment
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்