search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI additional director"

    • அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிறந்த தூய்மை கிராமத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சிறந்த தூய்மை கிராமமாக கோடநாடு ஊராட்சியை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடநாடு ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக கவனம் செலுத்தி முழுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையான கிராமமாக விளங்கி வருகிறது.

    பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது. சுகாதார பணிகள் இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறந்த தூய்மை கிராமமாக பரிந்துரைக்கப்பட்ட கோடநாடு கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முக்கிய பகுதிகள் தூய்மையாக உள்ளதா, குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு இருக்கிறதா மற்றும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி இயக்குனர் (ஊராட்சி) சாம் சாந்தகுமார், ஊராட்சி தலைவர் சுப்பி காரி, ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். சிறந்த தூய்மை கிராமமாக தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கி ஊக்குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் கூடுதல் இயக்குநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. #CBINageswaraRao #CBIadditionaldirector #NageswaraRaoappointed
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராகேஷ் அஸ்தானா


    சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், நாகேஸ்வர ராவ் பதவி உயர்வுடன் சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவ் கடந்த 2016-ம் ஆண்டில் சி.பி.ஐ. பணியில் இணைந்தார். இந்நிலையில், கூடுதல் இயக்குநர் பதவிக்கு இவரது பெயரை மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. #CBINageswaraRao #CBIadditionaldirector #NageswaraRaoappointed
    ×