என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case Dismiss"

    • வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
    • அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணைக்கு பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பரபரப்பான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, வணங்கான் படத்தின் பெயருக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

    வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த மனு மீதான விசாரணையின்போது, " 2 ஆண்டுகள் அமைதியாக இருந்த பின், பணம் பறிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்" என்று இயக்குனர் பாலா தரப்பு கூறப்பட்டது.

    இந்நிலையில், வணங்கான் பெயருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #PakistanSC #blasphemycase #Asiabeevi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு உள்ளூர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் மேல்மூறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் 31-10-2018 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தனர்.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    ஆசியா பீபி விடுதலை செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரி முஹம்மது சலாம் என்பவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.



    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு இன்று இம்மனுவை தள்ளுபடி செய்தது.

    ஆசிபா பீபியை விடுதலை செய்வதற்கு முன்னதாக முஸ்லிம் மதத்தலைவர்களின் கருத்தையும் நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார்.

    இதுஎப்படி மத விவகாரம் ஆகும்? சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் இந்த கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவர் குற்றவாளி அல்ல என்று தெரிந்தும் அவரை தண்டிக்க வேண்டும் என இஸ்லாம் மதம் கூறுகிறதா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார். #PakistanSC #blasphemycase #Asiabeevi
    ×