search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candlestick"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.

    இந்த திறப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர். கூடுதல் ேபாலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வரவேற்றார்.

    தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, டி.எஸ்.பி. வசந்தராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார், 30-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஜய், 35-வது வார்டு கார்த்திக், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

    • ரூ.63 லட்சம் செலவில் கட்டி முடிக்கபட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
    • நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் சாலையில் ரூ.63 லட்சம் செலவில் கட்டி முடிக்கபட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் கானொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். திறப்பு விழாவிற்கு பின் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடக்கி வைத்தார்.

    பின்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம்துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் இன்ஸ்பெ க்டர்கள் கன்னிகா, சுப்ரியா உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    ×