search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "business man death"

    கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி காலுப்பள்ளி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் வனசஸானா(63). இவர் செங்கல் பேக்கடரி தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலாவதி. இந்த நிலையில் இவர்கள் தங்களது காரில் டிரைவர் அஞ்சவர்தனுடன் பெங்களுரில் உள்ள தங்களது மகள் பிரியங்காவை பார்த்து விட்டு பின்னர் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணகிரி-குப்பம் நெடுஞ்சாலையில் இவர்கள் சென்ற கார் முன்னால் சென்ற வாகனம் மீது எதிர்பாரதவிதமாக மோதி விபத்துக்குள்ளனது. 

    இதில் பலத்த காயமடைந்த வனசஸானா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கலாவதி லேசான காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து மகாராஜகடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரூர்-கொலகம்பட்டி ரோட்டில் நடைபயிற்சி சென்ற பீரோ பட்டறை அதிபர் மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் மேல்பாட்ஷா பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (வயது45) பீரோ பட்டறை அதிபர்.

    இவர் தினந்தோறும் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இன்று காலை அரூர்-கொலகம்பட்டி ரோட்டில் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது இவரது பின்னால் வந்த கிரேன் வாகனம் இவர் மீது மோதியது. இதில் இவரது சட்டை மற்றும் உடலில் கிரேன் கொக்கி மாட்டி 10 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலேஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×