search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus theft"

    • போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.
    • 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 24-ந் தேதி இரவு தேவஸ்தானத்துக்கு சொந்தமான மின்சார பஸ்சை டிரைவர் திருமலை பஸ் நிலையத்தில் நிறுத்தினார். அவர் ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை வந்த மர்ம நபர் ஒருவர் பஸ்சை திருடிக்கொண்டு திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றார்.

    நாயுடு பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்ற போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது. இதனால் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் செய்வது அறியாமல் திகைத்த மர்ம நபர் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

    பஸ் காணாமல் போனதை அறிந்த டிரைவர் திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.

    பஸ் சென்ற பாதையில் உள்ள கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 19 வயதுடைய வாலிபர் பஸ்சை ஓட்டி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவருடைய இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபர் போட்டோவை வெளியிட்டு அவரை காட்டி கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

    மேலும் 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவர்களை ஏற்றி அவரவர் இடத்தில் இறக்கி விட்டு அதே பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • ரோந்து போலீசார் அந்த பள்ளி பஸ்சை வேப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோலியூர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சை டிரைவர் நேற்று மாலை மாணவர்களை ஏற்றி அவரவர் இடத்தில் இறக்கி விட்டு அதே பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு வந்த விருத்தாசலம் வி.கநகரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருணாச்சலம் (வயது 23) அந்த பள்ளி பஸ்சை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து பஸ் திருடி செல்லும்போது டிரைவருக்கு செல்போனிற்கு டிராக்கிங் மூலம் குறுஞ்செய்தி வந்தது. இந்த செய்தி மூலம் டிரைவர் பஸ் செல்லும் வழியை பார்த்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார் அந்த பள்ளி பஸ்சை வேப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே பஸ்சில் இருந்த அருணாச்சலம் தப்பி ஓடினார். போலீசார் அவரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்தனர். போலீசார் பஸ்சை ஆய்வு செய்தபோது பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து இருந்தது. இதனையடுத்து வேப்பூர் போலீசார் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பஸ் மற்றும் பஸ்சை திருடி சென்ற அருணாச்சலத்தை ஒப்படைத்தனர். திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பஸ் சேதமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×