search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus conductor death"

    அயனாவரத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அம்பத்தூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மணவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (45). மாநகர அரசு பஸ் கண்டக்டர்.

    நேற்று இரவு சென்னை திரு.வி.க.நகரில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம் சென்ற மாநகர பஸ்சை டிரைவர் கோபிநாத் ஓட்டினார். இதில் காஜாமைதீன் கண்டக்டராக பணிபுரிந்தார்.

    இரவு 10.30 மணி அளவில் இந்த பஸ் அயனாவரம் சயானி பஸ்நிறுத்தம் அருகே சென்றது. அப்போது கண்டக்டர் காஜாமைதீன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். வலிப்பும் ஏற்பட்டது.

    உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் கோபிநாத், மயங்கி விழுந்த கண்டக்டர் காஜா மைதீனை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு காஜா மைதீனை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஓடும் பஸ்சில் கண்டக்டர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

    புதுவையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    திருவண்ணாமலை மாவட்டம் நுங்கம்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். (வயது 50). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சேகர் சேதராப்பட்டு- புதுவை பஸ்சில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது மறைமலை அடிகள் சாலையில் பஸ் சென்ற போது டிரைவர் ‘திடீர் பிரேக்’ போட்டார். இதில் சேகர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கண்ணமங்கலம் அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் நாகநதி கொல்லமேட்டில் வசிக்கும் தனியார் பஸ் கண்டக்டர் தமிழரசன் (35). இவரது மனைவி தமிழரசி (27) இவர்களுக்கு ரீதீஷ் என்ற மூன்றரை வயது மகன், யுகேஷ் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. இதில் ரீத்தீஷ் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான்.

    நேற்று மாலை தமிழரசன், தனது மகன் ரீதீஷை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வழியில் கல்பட்டு காளியம்மன் கோயில் சாலையில் பார்வைக் குறைவான வளைவில் சென்றபோது, எதிரே கல்பட்டு மலையடிவாரத்தில் இருந்து சூளைமண் எடுத்துச் சென்ற டிப்பர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தமிழரசன் உயிரிழந்தார்.

    மகன் ரீத்தீஷ் லேசான காயங்களுடன் உயிர்தப்பினான் இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சாலை மிகவும் குறுகலாக உள்ள இடத்தில் வேகமாக லாரி வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என மறியல் செய்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தபின்னர், பிணத்தை பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×