search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buddhist struggle"

    • பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
    • ரெயில்வே பீடர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள சொக்கர் கோவில் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பது போல் நடித்துக் காண்பித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம் பகுதியில் உள்ள மோசமாக உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை பாதாள சாக்கடை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீர் அமைத்திட வேண்டும். காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ராஜபாளையம் ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் ரயில்வே பீட்டர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
    • தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .

    கடலூர்:

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக சிஐடியு சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் டியூட்டி ஆப் மற்றும் விடுப்பு கொடுத்துவிட்டு கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதற்கு நீதி கேட்டு பாய், தலையணை மற்றும் போர்வையுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை கடலூர் போக்குவரத்து அலுவலக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் மண்டல தலைவர் மணிகண்டன் துணை பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கண்ணன் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கையில் பாய் தலையணை மற்றும் போர்வைகளை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் . இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டு வந்தது

    ×