search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmi"

    • முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
    • ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைகிறது.

    தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

    குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது. இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம்.

    அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.

     1. கரிசலாங்கண்ணி (பிரிங்கராஜ்)

    `மூலிகைகளின் அரசன்' என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரிங்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

     2. அஸ்வகந்தா

    பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.

     3. வெந்தயம்

    நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

     4. பிராமி

    முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

     5. சிகைக்காய்

    தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.

     6. நெல்லிக்காய்

    ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.

     7. வேப்பிலை

    மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீக்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.

     8. ஆயுர்வேத எண்ணெய்

    தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்.

    இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

    • சுயம்பு வடிவான அன்னை முண்டகக் கண்ணி அம்மன்.
    • கருவறை மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டது.

    இத்திருகோவில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பொலிவுடன் விளங்குகிறது.

    ராஜகோபுரம் வாயிலில் நின்றாலே கருவறையில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு வடிவான அன்னை முண்டகக் கண்ணியைத் தரிசிக்கலாம்.

    ராஜகோபுர வாயிலையொட்டி இருபுறமும் நுழைவாயில்களும், வாயில்களுக்கு மேலே மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி சுதை வடிவங்கள் கொண்ட விமானங்கள் உள்ளன.

    கருவறையை அடுத்து முதல் சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ளது. பக்தர்கள் வலம் வரவும், அங்கப்பிரதட்ணம் செய்யவும் வசதியாக பிரகாரம் முழுவதும் கருங்கல் தள வரிசையால் அமைக்கப்பெற்றுள்ளது.

    கருவறையின் முன்புறம் மகா மண்டபமும், பின்புறம் பொங்கல் மண்டபமும் அமைத்து திருக்கோவில் பிரகாரம் முழுவதும் மண்டபத்தால் மூடப்பெற்றுள்ளது.

    திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் திருக்கோவில் அலுவலகமும் வடக்கு பக்கத்தில் மடப்பள்ளி, வாகன மண்டபம் முதலானவை உள்ளன.

    அன்னையின் சன்னதி:

    கிழக்கு நோக்கிய கருவறையில் அன்னை சுயம்பு வடிவாய் எழுந்தருளி இருக்கிறாள். சூல வடிவாய் பொலியும் சிலா ரூபம், சிலா ரூபத்துள் திரிசூலம் அன்னைக்குப் பின்புறமும் திரிசூல வடிவம் அன்னைக்கு நேர்மேலே கர்ப்பக்கிரக விமானம் அமைந்துள்ளது.

    ஐந்து கலசங்கள் கொண்ட விமானத்தின் மத்தியில் மலர்ந்த தாமரையாய் அன்னையின் முகம் புன்சிரிப்புடன் பக்தர்களுக்குக் கருணை மழை பொழிய சுதை வடிவில் காட்சியளிக்கிறாள். ஐந்து தலை நாகம் அன்னையைக் குடைபிடிப்பது போல் உள்ளது. விமானத்தின் இருபுறமும் தேவகன்னியர் வெஞ்சாமரம் வீச நிற்கின்றனர். பூமாலை ஏந்தியும் நிற்கின்றனர்.

    அம்பிகையின் கருவறை விமானம் முழுவதும் வெள்ளிக்கவசத்தால் போர்த்தப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. வாயிலின் இருபுறமும் துவாரபாலகியர் சுதை வடிவில் நிற்கின்றனர்.

    இங்குள்ள கருவறை மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டது. அம்பிகை-மாரி என்றாலே குளிர்ச்சியானவள். அன்னை சீதளதேவி எப்போதும் குளிர்ச்சியான இடத்திலேயே இருக்க விரும்புவதால், அன்னையின் மூலஸ்தானம் வெகுகாலமாகவே தென்னங்கீற்றுக் கூரையோடு, வெட்டிவேர் தட்டிகளால் உள்ளே சூழப்பெற்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நாக சன்னதி:

    கோவிலின் மேற்குப் புறத்தில் கருவறையின் பின்புறத்தில் நாகசன்னதியும், புற்றோடு கூடிய தல விருட்சமான ஆலமரமும் உள்ளன.

    மாரியம்மன் கோவில்களில் நாக வழிபாடு உண்டு. இத்திருக்கோவிலின் தலவிருட்சமான ஆலமரத்தடியில் உள்ள புற்றில் இருக்கும் நாகம், தினம் இறைவியைப் பூஜிப்பதாக மரபு, இரவு பூஜை முடிந்து, திருக்கோவில் சாத்திய பின்னர், புற்றில் இருக்கும் நாகப்பாம்பு கருவறைக்கும் வந்து அன்னையை பூஜிப்பது வழக்கம். பலர் கோவிலில் இரவு நேரத்தில் நாகத்தைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

    கருவறையின் பின்னே நாக சன்னிதி தனியே உள்ளது. நாகதோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல் போன்றவற்றிற்கு இங்குள்ள புற்றில் பால், முட்டை வைத்து நாக சன்னிதியில் வழிபாடு செய்வோர் குறைகள் நீங்க பெற்றுள்ளனர். அவ்வாறு நலன் அடைந்தோர் இக்கோவிலின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் நிறைய நாக பிரதிஷ்டைகள் செய்துள்ளனர்.

    உற்சவர்தேவி சன்னிதி:

    கருவறையில் இடப்புறத்தில் அழகிய விமானத்துடன் கூடிய உற்சவ சன்னிதி உள்ளது. அன்னையின் சன்னிதி சதுர வடிவில் அமைந்துள்ளது. சன்னிதியின் வாயிலின் இருபுறமும் துவார பாலகிகள் வடிவமும், பின்புறம் மாரியம்மன் வடிவமும் சித்திரத்தால் வரையப் பெற்றுள்ளன.

    அன்னை முண்டகக் கண்ணி கனிவான பார்வையுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். நான்கு கைகளுடனும் மூன்று கண்களுடனும் சாந்தம் தவழ விளங்கும் அன்னை தலையில் கரந்த மகுடமும், ஏனைய அணிகலன்களும் அணிந்து பின்னிரு கைகளில் உடுக்கையும், சூலமும், முன்னிரு கைகளில் கத்தியும், அபய முத்திரையிலும் காட்சியளிக்கின்றாள்.

    விழா காலங்களில் வெள்ளி சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் கருணை மழை பொழிகிறாள்.

    சப்த மாதர்கள் - ஏழு கன்னியர்:

    ஒரே சக்தி, பல வடிவங்களாகத் தன்னைத் தானே பிரித்துக் கொண்டும், மாற்றிக் கொண்டும் மாயை புரியும் தன்மை உடையது. இவ்விதம் எழுந்ததே `சப்த மாதர்கள்' எனப்படும் ஏழு கன்னியர் வழிபாடு.

    வாரத்தின் நாட்களை ஏழாகவும், இசையின் அடிப்படை ஸ்வரங்களை ஏழாகவும் வகுத்த நம் முன்னோர்கள் ஒன்றேயான சக்தியையும் ஏழு வடிவங்களாகக் கண்டு வணங்கியிருக்கிறார்கள்.

    பழமையான சிவாலயங்களிலும், சக்தி தலங்களிலும் ஏழு கன்னியர்களும் அவர்களுக்கு இருபுறமும் வீரபத்திரரும் விநாயகரும் காணப்படுகின்றனர்.

    கிராமங்களில் `கன்னிமார்' வழிபாடு செய்வதை இன்றும் காணலாம். எளிமையாக ஏழு செங்கற்களை வைத்து `ஏழு கன்னி'யரை வழிபடுவதையும் காணலாம்.

    ஏழு கன்னியர் பிரம்மி, மகேசுவரி, வைணவி, வராகி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர்.

    சிவபெருமான், அந்தகாசூரனுடன் நடத்திய போரிலே சிவபெருமானுக்கு உதவும் பொருட்டு நான்முகன், மகேசுவரன், திருமால் வராகமூர்த்தி, முருகன், இந்திரன் யமன் ஆகிய ஏழு தெய்வங்கள் அனுப்பிய தங்கள் சக்தியின் வடிவங்களே ஏழு கன்னியர்.

    கோவிலின் வடபாகத்தில் ஏழு கன்னியர் சன்னதி அமைந்துள்ளது. ஏழு கன்னியர் ரூபமற்ற சிலை வடிவில் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் ஐயனார் சிலையும், முனீஸ்வரர் சிலையும் உள்ளன. சிலர் இதனை பரசுராமர், ஜமதக்னி முனிவர் என்றும் கூறுகின்றனர்.

    கருவறையின் முகப்பிற்கு மேலாக சுதை வடிவில் சப்த மாதர்கள் எழில் வடிவொடு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். இடக்கால் மடித்தும், வலக்கால் தொங்கிய நிலையில் வாகனங்களில் அமர்ந்துள்ளனர். நான்கு கைகள், முன்னிரு கைகள் அபயவரத முத்திரைகளில் காணப்படும் பின்னிரு கைகளிலே படைக்கலங்கள் இருக்கும்.

    மகேசுவரி சினத்தையும், வைணவி பேராசையும், பிரம்மி ஆணவத்தையும், கவுமாரி மாயையும், இந்திராணி குற்றம் கண்டு பிடித்தலையும், சாமுண்டி கோள் சொல்லுவதையும், வராகி பொறாமையையும் குறிப்பனவாம். ஏழு கன்னியரை வழிபடுவோர் மேற்குறித்த கெட்ட குணங்கள் கெட, அறியாமை அகன்று நன்னிலை எய்துவர்.

    ×