search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy commits suicide"

    • தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன் கண்டித்துள்ளார்.
    • வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது.47). இவரது மகன் தமிழேந்தி (15) இவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில், தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன், தமிழே ந்தியை கண்டித்துவிட்டு, வேலையின் காரணமாக மங்கலம்பே ட்டைக்கு புறப்பட்டு சென்று விட்டார், பின்னர், வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு, வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்ததும், பதறிப்போன பாஸ்கரன், தனது மகனை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீஸில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகரெட் பழக்கம் இருந்ததால் இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
    • தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார்.

    இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது தந்தை சதீஷ்குமார் பார்த்துள்ளார். மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதனையடைந்த அவர் தவ்சிக் மவுலிசை திட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் சதீஷ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுத அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிறுவன் தவ்சிக் மவுலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×