search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bonda mani"

    • இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நடிகர் போண்டா மணி உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் போண்டா மணி நடித்துள்ளார்.

    சென்னை:

    கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி.

    வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த, அண்ணே போலீஸ்காரங்க வருவாங்க எதுவும் சொல்லிடாதீங்க. அடிச்சுகூட கேட்பாங்க அப்பவும் எதுவும் சொல்லிடாதீங்க என்று குளத்தில் மூழ்கி செல்லும் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானது.

    இதற்கிடையே, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 கிட்னியும் செயலிழந்த நிலையில் மாற்று கிட்னி அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

    பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போண்டா மணி ஒரு இலங்கை தமிழர் ஆவார். கேவிஸ்வரன் என்ற பெயருடன் இலங்கையில் இருந்து அகதியாக தமிழகத்துக்கு வந்தார். பசியின் காரணமாக அடிக்கடி போண்டா வாங்கி சாப்பிடுவதால் நண்பர்கள் அவரை போண்டா மணி என்றழைத்தனர். இதுவே சினிமாவிலும் அவருக்கு பெயராக அமைந்தது.

    இலங்கை போரில் போண்டா மணியின் தந்தை அவர் கண் முன்பே குண்டடிப்பட்டு இறந்துவிட்டார். தாயார் காணாமல் போய்விட்டார்.

    போண்டா மணிக்கு நடிகர் வடிவேலு தான் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார். போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வேல்ஸ் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 11-வது வகுப்பும் படித்து வருகின்றனர்.

    போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • இவரது சிகிச்சைக்கு பார்த்திபன், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி, சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

     

    போண்டாமணி

    போண்டாமணி

    ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

     

    போண்டாமணி

    போண்டாமணி

    இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நடிகர் பார்த்திபன், வடிவேலு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி கடந்த 27-ம் தேதி வீடு திரும்பினார்.

     

    மருத்துவமனையில் போண்டாமணியை சந்தித்த அமைச்சர் 

    மருத்துவமனையில் போண்டாமணியை சந்தித்த அமைச்சர் 

    இதனிடையில் மருத்துவமனையில் உதவி செய்வதுபோல் நடித்து ராஜேஷ் என்கிற பிரித்தீவ் என்பவர் போண்டாமணியுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். அவருக்கு உதவியாக கடைகளுக்கு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். இதனை நம்பி அவருடைய மனைவி மாதவி மருந்து வாங்கி வர அவருடைய ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.

     

    போண்டாமணி

    போண்டாமணி

    மருந்து வாங்கி வருவதாக சென்ற ராஜேஷ் ஏடிஎம் கார்டிலிருந்து நகைக்கடையிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கியதாக மாதவியின் செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போண்டாமணியின் மனைவி மாதவி இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் ராஜேஷை தேடி வந்தனர்.

     

    போண்டாமணி

    போண்டாமணி

    இந்நிலையில் ராஜேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைது செய்த ராஜேஷிடமிருந்து பணம் எதுவும் மீட்டதாக தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போண்டாமணியிடம் கருணை இல்லாமல் அவரை ஏமாற்றியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இவரது சிகிச்சைக்கு விஜய் சேதுபதியை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது உதவி செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி, சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.


     


    போண்டாமணி

    போண்டாமணி

    ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

     

    போண்டாமணியை நலம் விசாரித்த அமைச்சர்

    போண்டாமணியை நலம் விசாரித்த அமைச்சர்

    இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாகக் அறிவிக்கப்பட்டது.


     


    போண்டாமணி - விஜய் சேதுபதி

    போண்டாமணி - விஜய் சேதுபதி

    நடிகர் பார்த்திபன், போன் மூலம் தொடர்புக் கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். மேலும், வடிவேலு உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று கூறினார். நடிகர் விஜய் சேதுபதி மருத்துவ உதவிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.


     


    தனுஷ்

    தனுஷ்

    இந்நிலையில் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு ரூ.1 லட்சம் வழங்கி நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார். இவரின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • நகைச்சுவை நடிகர் போண்டாமணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இவரது சிகிச்சைக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.


    போண்டாமணி

    இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


    விஜய் சேதுபதி

    இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, போண்டாமணியின் மருத்துவ உதவிக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து போண்டாமணி கூறியதாவது, " கேட்டவுடனே நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டார் அவர் கொடுத்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம்" என்று கூறியுள்ளார்.


    பார்த்திபன் - வடிவேலு

    நடிகர் பார்த்திபன், போன் மூலம் தொடர்புக் கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். மேலும், வடிவேலு உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

     

    வடிவேலு

    வடிவேலு

     

    இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து கோயிலுக்கு சென்று அவர் முருகனை வழிபட்டார். பிறகு கோயில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

     

    சாமி தரிசனம் செய்த வடிவேலு

    சாமி தரிசனம் செய்த வடிவேலு

    அவர் கூறியதாவது, நான் தற்போது நடித்து வெளிவரப்போகிற படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும், நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தில் நான் குணசித்திர நடிகனாக நடித்திருக்கிறேன்.

     

    வடிவேலுவின் காமெடி குழு

    வடிவேலுவின் காமெடி குழு

    நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். நாய் சேகர் படத்தில் பாடல் பாடியுள்ளேன், அப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும். என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. இனி வரும் படங்களில் அவர்களை இணைத்துக் கொண்டு நடிப்பேன். உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்றார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி.
    • இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.


    போண்டாமணி

    இதையடுத்து நடிகர் போண்டாமணி இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    அதில், "அண்ணன் போண்டாமணி அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். தயவு செய்து இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


    போண்டாமணி

    இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் நுழைந்தவர். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவரை காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்றுங்கள். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது" என்று கூறினார்.

    மேலும், நடிகர் போண்டாமணி கூறுகையில், " வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருத்துவமனை பெரிய உதவியாக இருக்கிறது. மூச்சுத்திணறல் வந்ததில் படப்பிடிப்பு தளத்தில் அடிபட்டு என்னை இங்கு கொண்டு வந்தார்கள். தனியாருக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார்கள் நான் தான் ஓமந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினேன். நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள்" என்று கூறினார்.

    ×