search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bomb range"

    கேரளாவில் போலீஸ் நிலையம் மீது குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி கேரளாவை சேர்ந்த கனகதுர்க்கா (வயது 44), பிந்து (42) ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் சபரிமலை கர்மசமிதி அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு போலீஸ் நிலையம் மீதும் ஒரு கும்பல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் துப்புதுலக்கியபோது போலீஸ் நிலையம் மீது குண்டு வீசிய 10 பேர் கும்பல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பிரவீன், ஸ்ரீஜித், அபிஜித் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில்நிலையத்தில் வைத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீஜித், அபிஜித் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களை நெடுமங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை செய்யப்பட்டதால் ராமநாதபுரத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #bombing #Murder

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 37), விக்கி என்ற விக்னேஷ். இவர்கள் மீது கொலை, மிரட்டல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கடந்த மே மாதம் வாலாந்தரவையை சேர்ந்த விஜய், பூமி ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    கைதானவர்கள் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து குண்டர் சட்டதில் கைதானது ரத்து செய்யப்பட்டது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    அதன்படி கார்த்திக் தினமும் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

    நேற்று மாலை கார்த்திக் தனது கூட்டாளி விக்கியுடன் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்.


    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரை ஓட, ஓட விரட்டி வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்தது.

    அங்கிருந்து தப்பிய கொலையாளிகள் சிறிது நேரத்திலேயே நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் வாலாந்தரவையை சேர்ந்த ரூபன் (25), முரளி (27), பாஸ்கரன் (40), அர்ச்சுணன்(25), முருகேசன்(37) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விஜய், பூமியின் உறவினர்கள் ஆவார்கள்.

    சரணடைந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

    கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் 300-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வாலாந்தரவையில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் அரசு பஸ் இயக்கப்பட வில்லை. கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #bombing #Murder

    அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #bombrange

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். கட்சி பணிகளிலும் தீவிர ஆர்வம் காட்டிவரும் இவர் வெம்பக் கோட்டை பஸ் நிலையம் அருகில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.

    இரவு 10.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜ பாண்டி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பினர்.

    வெடிகுண்டு சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜபாண்டி வெடிகுண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டு சிதறல்களை சேகரித்தனர். வெடிகுண்டு வீச்சுக்கு அரசியல் முன்விரோதம் காரணமா? அல்லது தொழில் போட்டியால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்நத 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×