search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body of"

    • அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
    • மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த காரணாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையை நோக்கி சம்பத்தன்று காலை 10 மணிக்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.

    பின்னர் நிழற்குடையின் பின்புறம் உள்ள திட்டில் அவர் படுத்திருந்துள்ளார். பின்னர் அவர் இறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நிலையிலும், வலது கை மணிக்கட்டில் சிவப்பு கயிறு அணிந்தும், கருப்பு கலர் சட்டையும், பச்சை கலரில் வேட்டியும் அணிந்திருந்தார். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.
    • இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை பவானி ரோடு பூவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவி ந்தம்மாள். கணவனை இழந்த இவர் பெருந்துறை பகுதியில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு தாமரைக்க ண்ணன் (வயது 16), கமலேஷ் (வயது 14) என்று 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகி ன்றனர்.

    இதில் தாமரைக் கண்ணன் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர். இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தாமரைக்கண்ணனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளோடு அருகே உள்ள கே.கே.வலசு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லில் தாமரைக்கண்ணன் உடல் பிணமாக மிதந்து வந்துள்ளது தெரிய வந்தது.

    பெருந்துறை போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தாமரைக்கண்ணன் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×