search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலில் பிளஸ்-2 மாணவன் உடல் பிணமாக மீட்பு
    X

    வாய்க்காலில் பிளஸ்-2 மாணவன் உடல் பிணமாக மீட்பு

    • தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.
    • இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை பவானி ரோடு பூவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவி ந்தம்மாள். கணவனை இழந்த இவர் பெருந்துறை பகுதியில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு தாமரைக்க ண்ணன் (வயது 16), கமலேஷ் (வயது 14) என்று 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகி ன்றனர்.

    இதில் தாமரைக் கண்ணன் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர். இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தாமரைக்கண்ணனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளோடு அருகே உள்ள கே.கே.வலசு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லில் தாமரைக்கண்ணன் உடல் பிணமாக மிதந்து வந்துள்ளது தெரிய வந்தது.

    பெருந்துறை போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தாமரைக்கண்ணன் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×