search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blackmailer"

    • 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

    இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மேலும் அந்த வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இளம்பெண்ணின் கணவரிடம் தெரிவித்தனர்.

    முதலில் தனது மனைவி மீது இருந்த நம்பிக்கையால் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே அவரை கண்காணித்தார். அப்போது மனைவி, வாலிபருடன் பேசுவதை அறிந்து கொண்டார்.

    இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க இளம்பெண்ணின் கணவர் முடிவு செய்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இளம்பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    .

    பின்னர் சிறிது நேரத்தில் தனக்கு வேலை இருக்கிறது என கூறி விட்டு இளம் பெண்ணின் கணவர் வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் வெளியில் சென்றதும், இளம்பெண், தன்னுடன் வேலை பார்க்கும் வாலிபரை வீட்டிற்கு அழைத்தார். அவரும், இங்கு வந்தார். பின்னர் 2 பேரும் வீட்டிற் குள் தனிமையில் இருந்தனர். இதனையறிந்த இளம் பெண்ணின் கணவர், தனது உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து, இளம்பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் அழைத்து கொண்டு அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் 2 தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.அந்த வாலிபரை அழைத்து எச்சரித்து, அவரது மனைவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×