என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP vote counting"

    • தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
    • மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் இழுப்பறியில் உள்ளது.

    வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.

    60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது. பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பா.ஜனதா கூட்டணி 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்றவை பூஜ்ஜியம் இடத்தில் உள்ளது.

    60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின. இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகள் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

    அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    இந்நிலையில், திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

    மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் இழுப்பறியில் உள்ளது.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர்.
    • பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும்.

    தமிழகத்தில்பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல் 66 மாவட்டங்களில் நடந்து முடிந்து உள்ளது.

    இந்த தேர்தலில் கிளை, நகரம், மண்டலம், மாவட்ட, முன்னாள் நிர்வாகிகள் வாக்களித்தனர். ஒவவொரு மாவட்டத்திற்கும் 3 பேரை தேர்வு செய்யும் வகையில் 3 பெயர்களை எழுதி வாக்கு பெட்டியில் போட வேண் டும் என்ற அடிப்படையில் இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து பெட்டிகள் சென்னை யில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளான சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன், வி.பி.துரை சாமி, சுமதி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை மாவட்ட வாரியாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர். யார் பெயர் அதிகமாக வாக்கு சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததோ அதில் இருந்து 3 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு மையக் குழுவிடம் ஒப்படைத்தனர். மையக்குழு அந்த பட்டியலை டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.

    மாவட்டம் வாரியாக அனுப்பப்படுகின்ற பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ×