search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP in"

    • ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஈரோடு:

    பா.ஜ.க.பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை சம்பவத்தை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அய்யாசாமி முன்னிலை வகித்தார்.

    இதில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கர் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவா ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஏ.கே.மகேஷ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ×