என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP executives"
- பா.ஜனதா புதுவை நகரமாவட்ட ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- மேலும் புதுவை மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். கட்சியை பலப்படுத்த தேவை யான அறிவுரை களை வழங்கினார்.
புதுச்சேரி:
பா.ஜனதா புதுவை நகரமாவட்ட ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளையும் பலப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள அனை த்து திட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். புதுவை மாநிலத்தின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் புதுவை மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். கட்சியை பலப்படுத்த தேவை யான அறிவுரை களை வழங்கினார்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல். ஏ.க்கள் ரிச்சர்ட் ஜான்குமார், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கட்சியின் பொதுச்செயலாளர் மோகன் குமார், நகரமாவட்ட பொறுப்பாளர் ரத்னவே ல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் ஆனந்த கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் விஜயரங்கம், விஜய், விமலா, ஜெயக்குமார், ஆறுமுகம் ஆகியோர் செய்து இருந்தனர்.
மதுரை:
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (27-ந்தேதி) மதுரை வருகிறார். இதனையொட்டி மண்டேலா நகர் வாஜ்பாய் திடலில் நடக்கும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனை முன்னிட்டு மதுரை மாநகர், புறநகர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மதுரையின் 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசின் ரூ.2.10 லட்சத்தில் மானிய வீடு, இலவச எரிவாயு, 12 ரூபாய் செலவில் ரூ.2 லட்சம் காப்பீடு, 200 ரூபாய் முதலீட்டில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு மதுரை மாவட்டத்தில் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.
இந்த திட்டத்தால் பயனடைந்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அழைப்பிதழை வழங்குகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சசிராமனிடம் கேட்டபோது, பிரதமர் மோடியின் பொதுக்கூட் டத்தில் மாநகர், புறநகர் மாவட்டம் சார்பில் குறைந்தபட்சம் 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.
தமிழகத்தில் மதுரை மட்டுமின்றி 9 மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (சக்தி கேந்திரா) மற்றும் மகாசக்தி கேந்திரா, மண்டல் தலைவர்கள், மோடியின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் வருவதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
எனவே பிரதமர் மோடியின் மதுரை பொதுக் கூட்டம் வரலாறு காணாத வகையில் பொதுமக்களின் ஆரவார வரவேற்புடன் அமையும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்