search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biodiversity park"

    • பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள காக்காச்சி என்ற பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கும் நிலையில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய அரசு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று ஆய்வு செய்தார். அம்பை வனச்சரக அலுவலகர் நித்யா உடனிருந்தார்.பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்களை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் திரும்பினர். அப்போது வனத்துறை அதிகாரியை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மணிமுத்தாறு சுற்று வட்டார பகுதியை சுமார் 100-க்கும் மேற்பட்ட வர்கள் நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    அந்த மனுக்களில், வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்தி ரையாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். மேலும் அவர்களின் நீண்ட நாள் கோரி க்கையான கோவி லுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் மனு அளித்தனர்.

    அப்போது மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள், நகர செயலாளர் முத்துகணேஷ், ஜமீன் சிங்கம்பட்டி ஊரா ட்சி தலைவர் செந்தில்குமார், ஊர் நாட்டாமை சட்ட நாதன், துணை நாட்டாமை மாரியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.

    • சிறுமலை-தென்மலை ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • பல்வேறு பொழுதுபோக்கு அம்ச ங்கள், உயர்கோபுரங்கள் என அனைத்தையும் அமைக்கும் பணியில் வனத்துைற தீவிரமாக உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் உள்ள சீதோஷ்ணநிலை இங்கும் நிலவுவதால் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    ஆனால் இங்கு இயற்கையை ரசிக்க இடங்கள் இருக்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. இதனால் கார், பைக்குகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் உடனடியாக கீேழ இறங்குகின்றனர். இதைஅறிந்த வனத்துறை தற்போது அங்கு கட்டண த்துடன் அனுமதிக்கப்படும் பல்லுயிர் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.

    சிறுமலை-தென்மலை ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு உணவருந்த மரத்திலான அறை, செயற்கை நீருற்று, பட்டாம்பூச்சி பூங்கா, பலவண்ணபூச்செடிகள், கே ன்டீன்கள், மூலிகை செடிகள், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்கு அம்ச ங்கள், உயர்கோபுரங்கள் என அனைத்தையும் அமைக்கும் பணியில் வனத்துைற தீவிரமாக உள்ளது.

    இதன் பணி 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் பிரபு கூறுகையில், பல்லுயிர் பூங்கா பணிகள் விரைந்து நடந்து வருகிறது. சில மாதங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்ப டுவார்கள். பூங்கா 2 மாதங்களில் திறந்து செயல்பாட்டுக்கு வந்ததும் இவ்விடத்தில் விலங்குகள், பற வைகள் போன்ற வடிவங்களில் செடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெரிய கூண்டுகள் அமைத்து இங்குள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் கூண்டுக்குள் சென்று பார்வையிடும் வகையில் திட்டமதிப்பீடும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    ×