search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar shelter home"

    பீகார் மாநிலம், முசாபர்பூரில் தொடங்கி 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCtransfers #Biharshelterhome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர்  வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை அறிக்கையை டிசம்பர் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா இரு மாதங்களுக்கு முன்னர் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



    அவரை தொடர்ந்து போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி ஆஜரானார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் தொடங்கி அங்குள்ள 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரம் வெளிச்சத்துக்குவர காரணமாக இருந்த தனியார் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் பீகாரில் உள்ள 17 காப்பகங்களில் சிறுமிகள் சீரழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் பி லோக்குர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை பீகார் மாநில காவல்துறை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. #SCtransfers #Biharshelterhome #shelterhomeabuse #MuzaffarpurShelterHome 
    பீகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மற்றொரு காப்பகத்தில் தங்கியிருந்த 11 பெண்களைக் காணவில்லை. #BiharWomenMissing #MuzaffarpurShelterHome
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையின் போது அறிக்கையாக வெளியிட்டது. இது தொடர்பாக முசாபர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூரை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரிஜேஷ் தாகூரின் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த 11 பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரிஜேஷ் தாகூர் மீது முசாபர்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பீகார் அரசின்  சமூக நலத்துறை உதவி இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    குழந்தைகள் காப்பக விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், இந்த மகளிர் காப்பகத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 11 பெண்கள் மாயமானது தெரியவந்துள்ளது. காணாமல் போன  பெண்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #BiharWomenMissing #MuzaffarpurShelterHome

    ×