என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bigg Boss Julie"

    • விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை விமர்சித்தனர்.
    • விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.

    அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார். விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்தனர்.

    இந்நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்" என்று கிண்டலாக பேசியுள்ளார்.

    இந்நிலையில், விஜய்க்கு சவால் விட்ட பிக்பாஸ் ஜூலிக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "ஒவ்வொரு முறையும் விஜய் பேசினால் என்ன ஒரு பயம் ஏற்படுகிறது. விஜய் இப்படி பேசுகிறார். அவரின் ரசிகர்கள் இப்படி செய்வார்கள். இதனால உயிர்கள் போயிரும்ன்னு நடக்காத ஒன்றை இவர்களே சீன்களை உருவாக்கி மக்களை தூண்டி விட்டு ஒரு அஜென்டா செட் செய்து இப்படி பண்ணுவது நியாயமா?

    ஜூலி உங்க மேல இருக்கும் அக்கறையில் ஒரு விஷயம் சொல்றேன் என கூறி தன்னுடைய டிசர்ட்டில் இடம் பெற்றிருந்த "Be Yourself" என்ற வார்த்தையை காட்டினார்.

    யாரோ எப்பவோ பிக்பாஸில் போய் ட்ரெண்ட் செட் செய்தார்கள். நாமும் அப்படியே செய்யலாம் என அவர்கள் பண்ணியதை நீங்கள் பண்ணினால் இதோ இப்படித்தான் நடக்கும்.

    அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார். குட்டி கதை கூறுகிறார். தமிழ்நாடு அரசியல் அடங்காத ஒரு காளை மாடு மாதிரி. அனுபவம் இல்லாத ஒரு புது கட்சியாக நாங்க வந்திருக்கிறோம். அனுபவத்தை பார்க்க வேண்டாம். நோக்கத்தைப் பாருங்கள் என பேசினார். மக்கள் பிரச்னை என்ன என்பது எங்களுக்கு புரியும். உங்களுக்காக நாங்க நிறைய செய்வோம். நம்பி ஓட்டு போடுங்க என்று தானே கூறுகிறார். இதில் தவறாக புரிந்து கொள்வதற்கான இடமே இல்லையே.

    உண்மையிலே விஜய் பேச்சைக் கேட்டு சின்ன பசங்க தப்பு பண்ணி விடக்கூடாதுன்னு அக்கறையில் பேசுகிறீர்கள் என பார்த்தால் அதுவும் இல்லை. முதல் வீடியோ விஜயை தாக்கியும் இரண்டாவது வீடியோ தனி மனித தாக்குதல் என்பதும் தெளிவாக தெரிகிறது. சட்டப்படி தனி மனித தாக்குதல் என்பது தவறு. அது உங்களுக்கு நடந்தாலும் நான் கண்டிப்பேன்" என்று சனம் ஷெட்டி பேசியுள்ளார்.

    • விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன்.
    • உங்கள் ரசிகர்கள் என்னை எல்லா சமூக வலைத்தளங்களிலும் கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.

    அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார். விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்தனர்.

    இந்நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து, அதில் ஒன்னும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதை பார்த்த உங்க ரசிகர்கள்.. ஆமாம், உங்க ரசிகர்கள் தான். அவர்கள் இன்னும் அரசியல்வயப்படவில்லை.

    உங்கள் ரசிகர்கள் என்னை எல்லா சமூக வலைத்தளங்களிலும் கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மைனர் பசங்க கிட்ட முக்கால்வாசி போலி ஐடிகள் தான் இருக்கிறது.

    அதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை நீக்கவும் மாட்டேன், எனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன்.

    என்னை மிரட்டினால் பரவாயில்லை, ஆனா என்னைச் சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

    விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்.

    என்னைத் திட்டுனா என்னை திட்டுற மாதிரி தான். மக்களைத் திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன்.

    ஒரு பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் எவ்வளவு மரியாதையும், மதிப்பும், பாதுகாப்பும் உங்க ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவுக்கு கீழ் இருக்குற கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    பிக்பாஸ் படம் மூலம் புகழ் பெற்ற ஜூலி, தற்போது நடித்து வரும் ‘அம்மன் தாயி’ படத்தில் நடித்து வருவதால், அவரை ஊர்மக்கள் அம்மனாக வழிபட்டிருக்கிறார்கள். #Julie
    ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. சர்ச்சையான பெண்ணாக அறியப்பட்ட ஜூலிக்கு சினிமாவிலும் சர்ச்சையான வேடங்களே வருகின்றன.

    நீட் தேர்வுக்கு பலியான அனிதாவின் வாழ்க்கை படத்தில் அனிதாவாக நடிப்பதற்கே எதிர்ப்புகள் உள்ள நிலையில் ஒருபடத்தில் அம்மனாக நடித்து முடித்து இருக்கிறார். ’அம்மன் தாயி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர்கள் இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் சந்திரஹாசன்.

    மகேஸ்வரினிடம் ஜூலியை அம்மனாக நடிக்க வைத்தது பற்றி கேட்டோம் ‘அம்மனாக மட்டும் அல்லாது சாதாரண பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜூலி. அம்மனாக நடித்தபோது ஜூலி வழக்கமான ஜூலியாக இல்லை. வழக்கத்துக்கு மாறாக அமைதியாக சாமி வந்ததுபோலவே இருந்தார். அம்மனாக நடித்தபோது விரதம் இருந்து அந்த அலங்காரத்திலேயே இருந்தார்.



    ஓட்டலில் தங்காமல் கோவிலிலேயே தங்கினார். மதுரை பக்கத்தில் வடக்கம்பட்டி என்னும் ஊரில் எடுத்தோம். அந்த ஊர் மக்கள் ஜூலியை அம்மனாகவே வழிபட்டனர். படத்தில் இடம்பெறும் முளைப்பாரி திருவிழாவும் உண்மையிலேயே நடத்தப்பட்டது’ என்றார்.

    இந்த படத்தில் கதாநாயகனாக அன்பு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் நடிக்கிறார். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
    `அம்மன் தாயி' படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து நடித்து வருகிறார்.
    அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன்.

    `அம்மன் தாயி' படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:-

    ``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாரியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார்? என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம்.

    படத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கினார். ``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா?'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, ஆச்சரியப்பட்டார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் உச்சக்கட்ட காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்.

    விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.'' 
    ×