search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Besiege"

    • நகை சீட்டு கட்டியவர்களுக்கு நகை-பணம் தராததால் ஆத்திரம்
    • தகவல் அறிந்த பெரிய கடை சப்-இன்ஸ்பெ க்டர் வீர புத்திரன் தலைமையி லான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் சாலை ராஜா தியேட்டர் அருகே பிரபல பிரணாவ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த கடை இயங்கி வருகிறது. புதுச்சேரியில் இந்த நகைக்கடை திறக்கப்பட்டு ஒரு ஆண்டுதான் ஆகிறது. இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ், 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்க ப்பட்டது.

    இதை நம்பி வாடிக்கையா ளர்கள் பலரும் நகை சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு வந்துள்ளனர். இன்னும் சிலர் 12 மாதத்திற்கு முன்பாகவே சீட்டை முடித்துவிட்டு நகையை வாங்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல் கடந்த சில நாட்களாகவே கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் நகை கடைக்கு வந்தனர்.

    ஆனால் கடையில் தங்க நகைகள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் மட்டுமே இருந்தன. இதனால் சீட்டு பணம் செலுத்திய வாடிக்கை யாளர்கள் நகையை உடனே தரக் கூறினர்.

    நகை இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை தரவேண்டும் என கேட்டனர். அதற்கு கடை ஊழியர்கள் சரிவர பதில ளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாடிக்கை யாளர்கள் கடை மேலாளருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டத்துடன் கடை எதிரே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரிய கடை சப்-இன்ஸ்பெ க்டர் வீர புத்திரன் தலைமையி லான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மரியலை கைவிட்டு போலீஸ் நிலையைத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்குமாறு கூறினர்.அதன் படி வாடிக்கையாளர்கள் சிலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் வாடிக்கை யாளர்கள் சிலர் நகை கடையில் இருந்த வெள்ளி பொருட்களை நகை சீட்டு செலுத்திய பணத்திற்கு வாங்கி சென்றனர்.

    • பாண்டமங்கலம் அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது.

    ஆனால் கணினி அறிவியல் இல்லை. பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கணினி பாடப்பிரிவு கேட்டுள்ளனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை, எனவே மாற்று பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

    மேலும் அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவர்கள் செல்லமுடியாததால் இப் பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    மற்ற பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியாது என தலைமை ஆசிரியர் தங்கவேல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்பள்ளி கேட்டின் முன்பு நின்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர்களுடன் வந்து மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×