search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bell Company"

    • சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.
    • கலெக்டர் மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து, பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

    கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒன்றான வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடடுள்ளது.

    அதனடிப்படையில், 1,288 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியும், 17 வாக்குப்பதிவு எந்திரங்களும், 49 கட்டுப்பாட்டுக்கருவிகள் என மொத்தம் 1,354 எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த பணிகள் சிவகங்கை வட்டாட்சியார் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்வில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்சுகிதா, வட்டாட்சியர்கள் தங்கமணி, ராஜா உட்பட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டனா்.

    ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வேலை கேட்டு 4 விவசாயிகள் மண் எண்ணை கேனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை அருகே மத்திய பொதுத்துறை மின்மிகு உற்பத்தி நிறுவனமான பெல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொடங்குவதற்கு, சுமார் 124 விவசாயிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 109 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. கல்வி உள்ளிட்ட தகுதி அடிப்படையில் 15 பேருக்கு வேலை வழங்கப்படவில்லை.

    அந்த 15 பேரும் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பெல் நிறுவனம் வேலை வழங்க முன்வரவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 15 பேரில் 4 பேர் இன்று காலை பெல் நிறுவனத்தின் முன்பு உள்ள செல்போன் டவரில் மண்எண்ணை கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

    தகவலறிந்ததும், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார், ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான சிப்காட் போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.

    செல்போன் டவர் மேல் இருந்த 4 பேரையும் சமரசம் செய்து கீழே வரவழைத்தனர். விசாரணையில், சிப்காட் புளியந்தாங்கல் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 44), பாலு (38) மற்றும் லாலாபேட்டையை சேர்ந்த சம்பத் (40), பாஸ்கர் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    தற்கொலை மிரட்டல் விடுத்த 4 பேரிடமும் உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பெல் நிறுவனத்திடம் அவர்களுக்கு வேலை வழங்குவது பற்றியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. #tamilnews
    ×